கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Thursday 29 January 2015

புறம் பேசுவதின் தீமை!

புறம் பேசுவதின் தீமை!

''நான் மிஃராஜ் சென்றிருந்தபோது நரகத்தில் சிலரைக் கண்டேன் ,, அவர்கள் தம் உடலை செம்பால் ஆனா நகங்களால் கீறிக்கொண்டிருந்தார்கள். நான் ஜிப்ரயீல் [அலை] அவர்களிடம் , இவர்கள் யார் ? என வினவினேன் .  ''இவர்கள் தாம் மனிதர்களின் இறைச்சியை தின்பதற்கொப்பான புறம் பேசித் திரிந்தவர்கள் '' என விடையளித்தார்கள் என்பதாக அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .

Tuesday 27 January 2015

உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்.

5663. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Friday 23 January 2015

மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுதல்!

மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுதல்!
குணத்தில் அழகானவரே ஈமானில் முழுமையானவர். தன் மனைவியிடம் நல்ல முறையில்
நடந்துக் கொள்பவரே உங்களில் சிறந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : திர்மிதி.
குடும்பத்தினர்களுக்கு செலவு செய்தல்!
தனது பொறுப்பிலுள்ளவர்களை ஒருவன் கவனிக்காமலிருப்பது அவன் பாவி என்பதற்கு
போதுமான சான்றாகும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஆதாரம்
: அஹ்மத், அபூதாவுத்.

Thursday 22 January 2015

சீடர்கள் துவைத்த துணிகள்

குருதேவா! ஜமீன்தார் ஜம்புலிங்கம் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாம். அந்த வேலையைச் செய்தால் என்ன? என்று சீடர்கள் கேட்டனர்.
துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது? என்றார் பரமார்த்தர்.
கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோமே! என்று சீடர்கள் கூறினர்.

என் மகனிடம் சொல்லுங்கள்! ஒரு தாயின் மனக்குமுறல் !

தம்பீ,உங்களை போலவே எனக்கும் ஒரு மகன் இருந்தான்.எல்லா தாயையும் போல் தான் என் மகனையும் சீராட்டி,பாராட்டி மிகுந்த சிரமத்திற்கிடையிலும் வளர்த்தெடுத்தேன்.
1999ல் என்மகனும் அரபு நாடு செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டான்.அவனது விருப்பத்திற்கு தடையின்றி அனுப்பி வைத்தேன்.
மனம் முடித்த நிலையில் சென்றான் என்னருமை மகன்.
மற்ற தாயை போலவே என்மகனை நானும் எதிர்பார்த்தேன்.இப்போ வருவான்,அப்போ வருவான் என்று.வருடம் 13 ஆகிவிட்டது இன்றுவரை என்மகன் ஊருக்கு வரவே இல்லை.
அங்கிருந்து வரும் மற்ற மக்களிடம் கேட்பேன் என்மகன் எப்படி இருக்கான்?
அவர்கள் சொல்லும் பதில் இதுதான்,உங்கள் மகன் கைநிறைய சம்பாதிக்கிறார்,மனைவி,பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கிறார்.

Wednesday 21 January 2015

மறுமை வாழ்க்கை

5436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது. இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ்  அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
      அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்;(இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.[quran]   . உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.[quran]

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 51.

5437. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ”என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) நான் தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதைக் குர்ஆனிலுள்ள ”அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்” (32:17) எனும் வசனம் உறுதிப்படுத்துகிறது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 51

5440. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள், ”நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தேன். அப்போது அவர்கள் சொர்க்கத்தின் நிலை குறித்து பேசினார்கள்” என்று முழுமையாக ஹதீஸை அறிவித்தார்கள். பிறகு இறுதியில் ”அதில் எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்கள் உள்ளன” என்றும் கூறிவிட்டு, ”அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் தம் இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப் புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்; நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்” (32:16,17) எனும் வசனங்களை ஓதினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 51.

5441. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் ஒரு பயணி நூறு வருடங்கள் பயணிப்பார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் .51
5444. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி, ”சொர்க்கவாசிகளே!” என்று அழைப்பான். அதற்கு அவர்கள், ”எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளன” என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ், ”திருப்தி அடைந்தீர்களா?” என்று கேட்பான். அதற்கு சொர்க்கவாசிகள், ”உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (கொடைகள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியிருக்க, நாங்கள் திருப்தியடையாமல் இருப்போமா?” என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், ”இதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கட்டுமா?”  என்பான். அவர்கள், ”அதிபதியே! இதை விடச் சிறந்தது எது?” என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், ”உங்கள்மீது என் உவப்பை அருள்கிறேன்; இனி ஒருபோதும் உங்கள்மீது நான் கோபப்படமாட்டேன்” என்று கூறுவான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் :51.

5445. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசி(களில் கீழ்த் தட்டில் இருப்பவர்)கள் மேல்அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை நுஅமான் பின் அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு) ”கிழக்கு அடிவானில், அல்லது மேற்கு அடிவானில் நீங்கள் ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று” என்று (கூடுதலாக) அறிவித்ததை நான் கேட்டேன். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 51
மறுமை வாழ்க்கை  

Saturday 17 January 2015

ஒரு காலம் வரும் !



என் சமுதாயத்தவர்கள் மீது ஒரு காலம் வரும். அது சமயம் அவர்கள் ஐந்தை விரும்பி ஏற்பர் . ஐந்தை வெறுப்பர் .
உலகில் உயிர் வாழ்வதை விரும்புவர் ,, இறந்து படுவதை வெறுப்பர்.

செல்வத்தை விரும்புவர் ,, அது பற்றிய கேள்வி கணக்கை வெறுப்பர்.
உயர்ந்த மாளிகைகளைக்  கட்டுவதனை  விரும்புவர் ,, மண்ணறையை மறந்த விடுவர் .

Thursday 15 January 2015

அழைத்தும் ஏற்காததேன் ?

அழைத்தும் ஏற்காததேன் ?
ஹஜ்ரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம் [ரஹ்] அவர்களிடம் வினவப்பட்டது .  '' அல்லாஹ் என்னை அழையுங்கள் ,, நான் உங்களுக்கு விடையளிக்கிறேன் '' எனக் கூறுகின்றான் . நாங்கள் அவனை அழைக்கின்றோம் ,, அவன் எண்களின் வேண்டுதல்களுக்கு  விடையளிக்கவில்லையே! '' அதற்கவர்கள் , 'உங்கள் இதயங்கள் பத்து விஷயங்களால் இறந்துவிட்டன .
1] நீங்கள் அல்லாஹ்வை அறிந்துள்ளீர்கள் ,, ஆனால் அவனுக்கு குரிய கடமையை நிறைவேற்றுவதில்லை .
2] குர்ஆன் ஷரீஃபை ஓதுகிறீர்கள் ,, அதில் கூறியுள்ளவாறு செயல்படுவதில்லை .
3] இப்லீஸை  [உங்கள்] பகைவன் என்று வாதிக்கிறீர்கள் ,,  ஆனால் அவனைத்  தான் பின்பற்றுகிறீர்கள் .
4] நபி [ஸல்] அவர்கள் மீது அன்பிருப்பதாக  வாதிக்கிறீர்கள் ,, அவர்களின் வழிமுறைகளின்படி நடப்பதில்லை .
5] சுவர்க்கத்தை நேசிப்பதாக வாதிடுகிறீர்கள் ,, அதற்கென எச்செயலும் செய்வதில்லை.
6] நரகத்தை அஞ்சுவதாக வாதிடுகிறீர்கள் ,, பாவத்தை விட்டும் விலகிட மறுக்கிறீர்கள் .
7] மரணம் ஏற்படுவது உண்மை என்று கூறுகின்றீர்கள் ,, அதற்குரிய ஆயத்தங்களை செய்யாதிருக்கிறீர்கள் .
8] பிறரின் குறைகளை ஆராய்கிறீர்கள் ,, உங்களிலுள்ள குறைகளை விட்டு விடுகிறீர்கள்.
9] அல்லாஹ் அளித்த உணவை உண்கிறீர்கள்,, அவனுக்கு நன்றி செலுத்தாதிருக்கிறீர்கள்.
10] உங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்கிறீர்கள் ,, அவர்கள் மூலம் படிப்பினைப் பெறுவதில்லை என்று பதில் அளித்தார்கள் .
சுபுஹானல்லாஹ்  !!!
அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
சத்திய பாதை இஸ்லாம் .
இந்த தளத்தை இன்ஷாஅல்லாஹ் ஒரு முறை சென்று பார்க்கலாமே ! உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிர் செய்யலாம் . அல்லாஹ் உங்களுக்கு நற்கிருபைச் செய்வானாக ! ஆமீன் ....  www.islam-bdmhaja.blogspot.com/
இந்த  வாசகம் என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது . இன்ஷாஅல்லாஹ் உங்களில் நான் முதலில்  பின்பற்றுகிறேன்.  அல்லாஹ்வின் பொருத்தம் தான் நமக்கு  வேண்டும் .  என்னை சிந்திக்க வைத்த தேன்துளிகள் . உண்மை ! உண்மை  ! உண்மை! 

Tuesday 13 January 2015

யார் பொறுப்பாளிகள் ?

அஸ்ஸலாமு அழைக்கும் ! அன்பு முகநூல் சகோதரர்களுக்கு
ஒரு அன்பான வேண்டுகோள் !  யார் பொறுப்பாளிகள் ?  நம்முடைய சில முஸ்லிம் சகோதரிகள் காதலில் சிக்கி சீரழிந்துக் கொண்டிருக்கிறார்கள் . இவர்களைப் பற்றி விழிப்புணர்வு என்ற பெயரில் சிலர்  நல்லது என்று எண்ணி செய்கிறார்கள் .   சமீபத்தில் ஒரு சகோதரி கேரளாவை சேர்ந்த அந்த பெண் ஒரு மாற்றுமத பையனுடன் காதலில் விழுந்து , இறுதியாக அந்த சகோதரி கொலை செய்யப்பட்டாள். இந்த செய்தியை எல்லோரும் அறிந்தது .  அந்த பெண்ணின் புகைப் படத்தை facebook மற்றும் what 's up மூலமாக போட்டார்கள் .  என்ன நோக்கத்தில் சிலர் அந்த பெண்ணின் புகைப் படத்தை போட்டார்கள் என்றால் மற்ற பெண்கள் கவனமாக இருப்பார்கள் என்ற நோக்கத்தில் தான்.    ஆனால், இந்த அணுகுமுறை சரியா அல்லது தவறா ? என்று அவர்கள் அறியவில்லை , சிந்தித்தும் பார்க்கவில்லை . இப்படி செய்வது சரியான அணுகுமுறை இல்லை . இப்படி இரு சம்பவம் நம் வீட்டில் நடந்தால் நாம் என்ன செய்வோம் ?  எப்படி நடந்துக் கொள்வோம் ?  இப்படி அசிங்கப்படுத்துவமா ?

Sunday 11 January 2015

நோயாளியை காணச் சென்றால்.......

ஒருவன் நோயாளியைக் கானச்சென்று நலம் விசாரித்து வரும்வரை அவன் சுவனப்
பூங்காவில் இருப்பவன் போலாவான் என்றும்,

அவனுக்கு எழுபதாயிரம் வானவர்களைக் கொண்டு இறைவன் நிழல் வழங்குவான் என்றும்,


அவன் எழுநூறு நாட்கள் நோன்பு நோற்ற பலனைப் பெறுவான் என்றும்,

அவன் காலையில் நோயாளியின் நலன் விசாரிக்கச் சென்றால் மாலைவரை அவனுக்காக
வானவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவர் என்றும்,


மாலையில் சென்றால் அடுத்த நாள் காலைவரை அவ்விதம் செய்வர் என்றும்,

அவன் நோயாளியின் நலம் விசாரிக்கத் தன் இல்லம் விட்டுப்
புறப்பட்டுவிட்டால் அவனையும் நோயாளியையும் அல்லாஹ்வின் அருள் சூழ
சூழ்ந்துகொள்ளும் என்றும்,

இத்தனை சாக்குப் போக்குகளா ?

“தாத்தா புஷ்ராவோட சிறுநீர் உடுப்புல பட்டிருக்கின்றதே; அது நஜீஸ்….”


“ம்…. தெரியும். அதனால தான் இப்ப நான் தொழுவுறது இல்ல.”

“வாப்பா இஷாத் தொழுகைக்கு அதான் சொல்லப் போறாங்க. மஃக்ரிப் தொழப் போங்களேன்…”

“ஆ…. மகளே… இப்பதான் வேலை முடிஞ்சு வந்தேன்… பிறகு குளிச்சுட்டு
இரண்டையும் சேர்த்து தொழுவோம்…”

“தம்பி… தொழப் போங்களேன்… உங்களுக்கு எத்தனை வயசாகுது; இன்னும்
சின்னப்புள்ளன்னு நினைப்பா…?”

Thursday 8 January 2015

அண்ணல் நபி [ஸல்] ஓர் அழகிய முன்மாதரி !


இறைவன் மனிதனைப் படைத்து,​​ அவனுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை
அமைத்துக் கொடுத்து இவ்வுலகில் வாழ வைத்தான்.​ மனிதன் தன்னை மட்டுமே
வணங்க வேண்டும்,​​ தனக்கு நிகராக எதையும் ஆக்கிவிடக் கூடாது,​​ தனது
அருட்கொடைகளுக்கு மனிதன் நன்றி செலுத்தி வாழ வேண்டும் என்பதற்காக
இறைத்தூதர்கள் மூலம் வாழ்க்கைத் திட்டங்களை அறிவிக்கச் செய்தான்.
எல்லா இறைத் தூதர்களும் மனித இனத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட
புனிதர்கள்தாம்.​ எல்லாச் சமுதாய மக்களுக்கும் இறைத் தூதர்கள்
அனுப்பப்பட்டனர்.​ இறைத் தூதர்கள் நல்லோருக்கு சுபச் செய்தி
கூறுபவர்களாகவும்,​​ தீயோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும்
இருந்தார்கள்.​ ஓர் இறைத் தூதரின் மறைவுக்குப் பின் அத்தூதர் காலத்து
மக்கள் இறைவனை மறந்து,​​ இறைக் கட்டளைக்கு மாறு செய்து,​​
அநியாயம்-அட்டூழியங்களில் ஈடுபட்டு தான்தோன்றித்தனமாக வாழ்ந்த ​
காலங்களில்,​​ இறைவன் தனது மற்றொரு தூதரை அனுப்பி,​​ அம்மக்களை
நேர்வழியின் பக்கம் அழைத்தான்.

Wednesday 7 January 2015

ஆன்மீக சூழல் அற்றுப் போகும் முஸ்லிம் வீடுகள்

உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)

வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக் குரியதாகவும் அமைய வேண்டும் என்றே
எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய
எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற
வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

வீட்டுக்குள் இருப்பவர்களாலோ அயலவர்களாலோ அல்லது சூழலில் உள்ளவர்களாலோ
எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே பெரிதும்
விரும்புகின்றனர்.

Saturday 3 January 2015

இஷ்ராக், லுஹா தொழுகைகள்

இஷ்ராக், லுஹா தொழுகைகள் பற்றிய விவரங்களை ஆதாரங்களுடன் விளக்கினால்
வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
தெளிவு:-



கடமையான தொழுகைகளின் நேரங்கள் குறித்தும், கடமையான தொழுகைக்கு முன்னரும்
பின்னரும் தொழவேண்டியசுன்னத்தான தொழுகைகள் பற்றியும் முந்தைய பதிவுகளில்
கண்டோம். இஷ்ராக், லுஹாத் தொழுகைகள் விபரங்களை இப்பதிவில் காண்போம்!

Thursday 1 January 2015

அயல் வீட்டாருடன் நபியவர்களின் கனிவு

நபியவர்களின் அயல் வீட்டார்கள் நபியவர்களை கண்ணியப்படுத்தினார்கள். அவ் அயல் வீட்டார் பற்றி நபியவர்களிடத்தில் பெரும் மதிப்பே இருந்தது. “அயல் வீட்டாரை வாரிசாக்கிவிடுவார்களோ என நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், அயலவரைப் பற்றி உபதேசிக்கக் கூடியவர்களாகவே இருந்தார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)