என் சமுதாயத்தவர்கள் மீது ஒரு காலம் வரும். அது சமயம் அவர்கள் ஐந்தை விரும்பி ஏற்பர் . ஐந்தை வெறுப்பர் .
உலகில் உயிர் வாழ்வதை விரும்புவர் ,, இறந்து படுவதை வெறுப்பர்.
செல்வத்தை விரும்புவர் ,, அது பற்றிய கேள்வி கணக்கை வெறுப்பர்.
உயர்ந்த மாளிகைகளைக் கட்டுவதனை விரும்புவர் ,, மண்ணறையை மறந்த விடுவர் .
உலகத்தை விரும்புவர் ! மறுமையை மறந்துவிடுவர் .
படைக்கப்பட்டவற்றை விரும்புவர் ,, படைத்தவனை மறந்துவிடுவர் .
சுவனம் என்னிடமுள்ளது ,, ஆனால், வழிபாடு உன் மூலம் நிகழவேண்டும் .
தெய்வீகத் தன்மை என்னில் உண்டாகும்,, அடிமைத் தனம் உன்னில் நிகழவேண்டும் .
துஆ என்னும் இறைஞ்சுதல் உன்னில் நிகழவேண்டும் ,, அதனை ஒப்புக்கொள்ளுதல் என்னில் நிகழும் .
ஓ! என் அடியானே! சோதனை என் மூலம் நிகழும்,, அதனைப் பொறுத்துக் கொள்வது உன்னில் நிகழவேண்டும்.
உணவு அளிப்பது என்னில் நிகழும்,, நன்றி செலுத்துதல் உன்னில் நிகழவேண்டும்.
மன்னிப்பு என்பது என்னில் நிகழும் ,, மன்னிப்புத் தேடுவது உன் மூலம் நிகழவேண்டும் .
என்னுடைய 'தீன் ' சலாமத் பெறுவது எதிலுள்ளது ?
தீன் சலாமத் பெறுவது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உள்ளது.
எனது ஈமானின் ஈடேற்றம் எதிலுள்ளது ?
பொய் , புறம், வீண்பேச்சுக்கள் , தீயவற்றை மொழிதல் ஆகியவற்றை விட்டும் உம்முடைய நாவைப் பேணிக்கொள்ளும் . அதில்தான் உம்முடைய ஈமானின் ஈடேற்றம் உள்ளது.
என் ஆன்மா சலாமத் பெற்றிடவும் தூய்மை பெற்றிடவும் விமோசனம் எதில் உள்ளது ?
உலகத்தின் மீது பேராசை கொள்வதையும் உலகிலுள்ள இன்பங்களை அனுபவிப்பதைத் தவிர்த்துக் கொள்வதிலும் இருக்கின்றது .
நற்குணம் படைத்த மனைவி தீன் என்னும் வீட்டிற்குத் தூண் போன்றவள் ஆவாள் .
வீட்டிற்கும் பரக்கத்தும் ஆவாள்.
கணவனின் வணக்க வழிபாடுகளில் ஆதரவு காட்டுபவளும் ஆவாள்.
ஒழுக்கம் இல்லாதவனிடம் கல்வி இருக்காது.
பொறுமை இல்லாதவனிடம் தீனைக் காண முடியாது.
பேணுதல் இல்லாதவனிடம் இறை நெருக்கத்தைக் காண இயலாது.
No comments:
Post a Comment