*இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு வாழுங்கள்*


*எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்*


*எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்*.


*எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்*.


*இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம்.*


*வாழ்க்கையும் இதே மாதிரி தான்.*


*நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்.*


*அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்*.


*சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை.*


*எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்*.


*அவன் தான் இறைவன்*


*பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றான்*.


*உலகில் மனிதனாய்ப் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்*.


*இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்*


*இன்னும் சிலரை நோய் நொடிகளால் சோதிக்கின்றான்*


*இன்னும் சிலரைக் கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான்.*


*ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்.*


*நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும் தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரிய வரும் மற்ற மனிதர்களும் நம்மைப் போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று.*


*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்*.


*நீங்கள் உங்களது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றீர். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.*  

  

*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*


*நீங்கள் உங்களது தொழிலை நோக்கி செல்கின்றீர். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல்  அலைகின்றனர்*.


*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*


*நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றீர்.*


*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*


*நீங்கள் நீங்களாக இருக்கின்றீர். எத்தனையோ பேர் அவர்கள் உங்களைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்.*


*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்*.


*எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருக்க பிறரை மகிழ்வியுங்கள்*.


*இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருங்கள்*.


*உங்கள் வாழ்க்கை வளமாகி  விடும்.! சத்தியமான உண்மை*.          கொஞ்சம் பாலஸ்தீன் மக்களை நினைத்து பாருங்கள், அவர்களுக்கு வாழ்வா அல்லது சாவா என்று ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.  சிலர் வீட்டை இழந்து , குழந்தைகளை இழந்து. உணவு இல்லாமல் பசி பட்டினியோடு இருக்கிறார்கள். அவர்களை நினைத்து பாருங்கள். இறைவனுக்கு நன்றி என்று முழுமனதுடன் சொல்வோம். எனக்கு அது இல்லை , இது இல்லை , அந்த ஆசை நிறைவேறவில்லை என்று புலம்பும் சிலருக்கு , கொஞ்சம் வெளியுலகத்தை பார்க்கவும் 'என்ன நடக்கிறது என்று ' இருப்பதை கொண்டு நிரப்பமாக வாழ கற்றுக்கொள்வோம் . இறைவன் நமக்கு கொடுத்ததை எண்ணி நன்றியுடன் இருக்க கற்றுக் கொள்வோம்.   

Comments